Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாணவிகள் தற்கொலை எதிரொலி: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (11:10 IST)
அரக்கோணம் அருகே 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவிகள் நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளின் வகுப்பாசிரியை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியை மீனாட்சி ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட மாணவிகளின் உடலுக்கு மலர் வளையம் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனைக்கு வந்தபோது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆட்சியரை சூழ்ந்து கொண்டு,  நீதி கேட்டு முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments