Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரக்கோணத்தில் கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை

Advertiesment
பள்ளி மாணவிகள்
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (19:42 IST)
அரக்கோணம் அருகே ராமாபுரத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் உள்ள கிணற்றில் உடல்கள் மிதப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கிணற்றில் 4 மாணவிகள் குதித்து தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த 3 மாணவிகளின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளும் அரசு பள்ளியில் படிப்பவர்கள் என கூறப்பட்டுள்ளது. மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதாகவும், பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது; துணை பொதுச்செயலாளர் அறிவிப்பு