Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைனான்சியர் அன்புசெழியனால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைகள் - வெளிவரும் தகவல்கள்

பைனான்சியர் அன்புசெழியனால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைகள் - வெளிவரும் தகவல்கள்
, வியாழன், 23 நவம்பர் 2017 (14:56 IST)
அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் தமிழ் சினிமா துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர்.
சசிகுமாரின் கம்பெனி தயாரிப்பு நிர்வாகத்தை நிர்வகித்து வந்த அசோக் குமார் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் குமார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய  தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில் அந்த ஃபைனான்சியரால் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஷ் கடன் தொந்தரவால் இறந்து போனார். இதனை தொடர்ந்து பலரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளது ஒவ்வொன்றாக வெளிவருகிறது. இந்த நிலையில்  90களில் மிக பிரபல நடிகைகளான ரம்பா, தேவையானி ஆகியோர் இதே ஃபைனான்சியர் மூலம் சொந்தமாக படம் எடுத்து பின்  சிதர்வதைக்கு ஆளானதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீத்-சிவா கூட்டணியில் அடுத்த படம் ‘விஸ்வாசம்’ - தலைப்பு அறிவிப்பு