Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் மரணம்

தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் மரணம்
, புதன், 20 அக்டோபர் 2021 (14:36 IST)
தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை தகவல்.

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், இந்த மாதம் தொடக்கமே தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மழைக்கு 159 கால்நடைகள், 56 குடிசைகள் முழுமையாகவும் 429 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவின் தனி வியூகம் - மற்ற கட்சிகள் நிலை என்ன?