Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; அதிர்ச்சி தகவல்!

Advertiesment
rummy
, வெள்ளி, 13 ஜனவரி 2023 (07:55 IST)
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக கடந்த சில மாதங்களில் பலர் மரணம் அடைந்துள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 30 வயது பாலன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
தனது தந்தையின் வங்கி கணக்கில் செலுத்த கொடுத்த ஐம்பதாயிரம் பணத்தை சூதாட்டத்தில் இழந்ததாகவும் நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது 
உயிரிழந்த பாலன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அவரது மறைவு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

67.03 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!