Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

online
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:58 IST)
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் அரசு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அனைத்து வகையான ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதித்து சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த சட்டத்தின்படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநில கவர்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன்: முதல்வர் அதிரடி உத்தரவு