Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்: மொத்த எண்ணிக்கை 5ஆக உயர்வு!

Advertiesment
students
, ஞாயிறு, 30 மே 2021 (10:46 IST)
PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது ஏற்கனவே இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளதை அடுத்து மொத்தம் 5 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்
 
PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டை முதன் முதலில் மாணவி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விசுவரூபமாக மாறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து மேலும் ஒரு மாணவி ராஜகோபாலன் மீது புகார் கூறினார்
 
இந்த நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்ததை அடுத்து காவல்துறையில் இதுவரை அவர் மீது 5 மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் PBSS பள்ளியின் மேலும் சில ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை செயலாளரை திரும்ப கொடுங்கள், காலில் விழவும் தயார்: மம்தா பானர்ஜி