Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து...21 பேர் பலி...பலர் படுகாயம்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (14:29 IST)
இத்தாலி நாட்டில் கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு வடக்கு இத்தாலியில் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து சாலையை விட்டு விலகி விழுந்ததாக தகவல் வெளியாகிறது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments