2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தங்கள் கட்சி தயாராகி வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க-பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய தி.மு.க ஆட்சியை அகற்றப் பாடுபடுவோம் என்றும் ரங்கசாமி கூறினார். இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.