Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Advertiesment
anbhumani
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (18:00 IST)
திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்ட நிலையில், 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

 இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்,

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்;

இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர்மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும்.  தவறுகள் திருத்தப்பட வேண்டும்..தொடரக் கூடாது!

மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.  மற்ற இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை  கட்டாயமாக்க வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி... ஓபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஜெயகுமார்