Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேர ஊரடங்கு பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீஸார்: சென்னை மாநகர காவல்துறை

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:54 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து சென்னையில் பாதுகாப்பிற்காக 10,000 போலீசார் பணி புரிவார்கள் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது
 
சென்னையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 449 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அத்தியாவசிய வேலை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. வணிக நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர் 10 மணிக்கு முன்பாகவே தங்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்துவிட வேண்டும் என்றும் அத்தியாவசிய பணி, மருத்துவ உதவி கோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் காவல்துறையினர் அனுமதிப்பார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments