Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம்!

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம்!
, வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:07 IST)
சமீபத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் இது குறித்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறி இதனை அடுத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயத்ரி ரகுராம் ஆபாசமாக சித்தரித்து வீடியோ: கமிஷனர் அலுவலகத்தில் புகார்