Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த மீன் பிரியாணி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மீன்- 1/2 கிலோ
அரிசி - 3 டம்ளர்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பட்டை -  3
லவங்கம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 1
புதினா - தேவையான அளவு, 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து  வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். 
 
அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும். 
 
அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை பழச் சாறு உப்பு,  மீன், அரிசி, 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இறக்கினால் மீன் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments