Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செக்யூரிட்டிக்கு கூப்டது குத்தமாயா.. 26 லட்சத்துக்கு பிரியாணி பில்! – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

செக்யூரிட்டிக்கு கூப்டது குத்தமாயா.. 26 லட்சத்துக்கு பிரியாணி பில்! – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:56 IST)
பாகிஸ்தானில் விளையாட வந்த நியூஸிலாந்து வீரர்களுக்கு பாதுகாப்பளித்த போலீஸார் செய்த வேலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையே நடைபெற இருந்த டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக நியூஸிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் நியூஸிலாந்து திரும்பினர்.

இந்நிலையில் நியூஸிலாந்து வீரர்கள் முன்னதாக இஸ்லமாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு 5 எஸ்.பிக்கள் உட்பட 500 போலீஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் இந்த போட்டிகள் ரத்தானது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏகப்பட்ட பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதாதகுறைக்கு நியூஸிலாந்து வீரர்களுக்கு காவல் இருந்த காவலர்கள் நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பெயரை சொல்லி பிரியாணியாக மண்டியிருக்கிறார்கள். இதனால் பிரியாணி பில் மட்டும் 26 லட்ச ரூபாய் வந்துள்ளது. இந்த பில்லை கண்டதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீம் அறிவிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்! – போட்டோ போட்டு சிக்கிய ஹூடா!