Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்சள் காமாலை நோயை சரிசெய்ய உதவும் மூலிகை கீழாநெல்லி !!

Advertiesment
Keezhanelli
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:33 IST)
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.


கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது.

குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.

கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே. இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு. இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும். சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ஆயிரமாக குறைந்த பாதிப்பு எண்ணிக்கை! – இந்தியாவில் முடிவுக்கு வரும் கொரொனா!