Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலில் உள்ள உஷ்ண நோய்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய் !!

Advertiesment
உடலில் உள்ள உஷ்ண நோய்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய் !!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (15:03 IST)
தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது. மேலும் புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.


தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளித்தால் உடலில் உள்ள உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.

தேங்காய் எண்ணையில் தோலை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளன.

தலைமுடி கொட்டுதல், பித்த நரை, இளநரை, பொடுகு, வழுக்கை போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் தான் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, ஏற்கனவே இருக்கும் நோய்களை இருந்த இடம் தெரியாமல் வெளியேற்றும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வேப்ப எண்ணெய் !!