Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமதுரத்தின் மருத்துவ குணங்களும் அவற்றின் பயன்களும் !!

அதிமதுரத்தின் மருத்துவ குணங்களும் அவற்றின் பயன்களும் !!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:53 IST)
அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.


அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தலையிலுள்ள புண்கள் குணமாகும். தலைமுடி ட்டுப் போல பிரகாசிக்கும்.

தாய்ப்பால் போதுமான அளவு இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அதிமதுரத்துடன் தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சாப்பிட தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை சரியாகும்.

சோம்பு மற்றும் அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். உள் உறுப்புகளின் சூடு தணிந்து, உடல் சுறுசுறுப்பாகும்.

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும். கண் பார்வை தெளிவடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா அகத்திக்கீரை....!!