Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தும்பை செடியில் உள்ள அற்புத மருத்துவ பலன்கள்...!!

தும்பை செடியில் உள்ள அற்புத மருத்துவ பலன்கள்...!!
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு.
தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம். குணமாக்கும் நோய்களில் விஷ காய்ச்சல், பசி இன்மைக்கு  காமாலை என்னும் மஞ்சள் காமாலை மற்றும் சர்க்கரை நோய்க்கு, விஷ ரோகங்களுக்கு, மூல நோய்க்கும் நல்ல பலனை தரும்.
 
தும்பை பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாக  காதில் விட்டுவர காதில் சீழ் வடிதல் குணமாகும்.
 
தும்பை இலையை அரைத்து உள்ளுக்கு கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். 
 
தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
 
தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில்  பூசி வரத் தேமல் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்...!!