Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவகுணம் நிறைந்த கோரைக்கிழங்கு எதற்கெல்லாம் மருந்தாகிறது...?

மருத்துவகுணம் நிறைந்த கோரைக்கிழங்கு எதற்கெல்லாம் மருந்தாகிறது...?
கோரைக்கிழங்கால் பித்தம், தேக எரிச்சல், தாகம், குதிகால் வாதம், குளிர் சுரம், வாத சுரம் முதலியவை நீங்கும். கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.
கோரைக்கிழங்கை மேல் தோலை நீக்கி சுத்தம் செய்து இடித்து பொடி செய்து காலை, மாலை என 1 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட  புத்திக்கூர்மை, தாது விருத்தி உடல் பொலிவு உண்டாகும்.
 
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல்  புழுக்கள் வெளிப்படும்.
 
கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடிநீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்.
 
பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு  அதிகமாகும். கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.
 
இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோதுமை பாயாசம் செய்ய...!!