Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய் !!

அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய் !!
கோவைக்காயின் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் உண்டு. இது சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழ்கிறது.


இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ் 6 பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். 
 
சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். 
 
சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசிக்கொள்ளலாம். 
 
வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம். 
 
உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும். கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. 
 
உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது. கோவைக்காய் கொடியின் வேர் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து குடித்தால் நீர்கட்டு நீங்கும். பித்தம் அதிகரிப்பதால் மூட்டுகளில் உண்டாகும் குத்தல் மற்றும் வீக்கத்திற்கும் இந்த நீரை பருகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பலாப்பழம் !!