Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்-பிரபல நடிகை

Vindhyaa
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:07 IST)
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது அஇஅதிமுக. எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட ஆண்டுகளாக ஜெயலலிதா பதவி வகித்து வந்தார்.

அவர் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ‘’இக்கட்சியில் முக்கிய நிர்வாகி விந்தியாவுக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில், என் வீடு, விலாசம், விசுவாசம், அடையாளம், கௌரவம் அதிமுக.   புரட்சித்தலைவரின் ஆசியில் புரட்சித்தலைவியின் வழியில் புரட்சித்தமிழரின் தலைமையில் பொன்விழா கடந்த அதிமுகவில் பெரும் பொறுப்பளித்து என் வாழ்விற்கு சிறப்பளித்த பொதுச்செயலாளருக்கு என் நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெங்கு காய்ச்சல்: திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்!-எடப்பாடி பழனிசாமி