Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் நடனமாட மறுத்த சிறுமிகளை எரித்த இளைஞர்கள் கைது

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (22:53 IST)
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமணவிழாவில் நடனம் ஆடன மறுத்த சிறுமியை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தின் வைசாலி என்ற மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமணா விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், சிறுமியக்ள் உள்ளிட்ட பலரும்  நடனம் ஆடினர்.

அப்போது, சில இளைஞர்கள் தங்களுடன் நடனமாட சிறுமிகளையும், பெண்களையும் கட்டாயப்படுத்தினர்.

அதற்கு, சிறுமிகள் நடனமாட மறுத்தனர். இதில், ஆத்திரம் அடைந்த  இளைஞர்கள் சிறுமிகள் மீது தீ வைத்தனர்.

அங்கிருந்த மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரசாந்த்குமார், பிரதீக்குமார், ஆகிய இரண்டு வாலிபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments