Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்!

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்!
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:29 IST)
பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் வளாகத்தில் 19 வயது மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர் நாடக மா நிலம் பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில்  இன்று லயஸ்மிதா (19) என்ற மாணவியை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்த பவன் கல்யாண் என்ற இளைஞர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

இந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேறு கல்லூரியில் படிக்கும் மாணவர் லயஸ்மிதாவை கொல்ல வேண்டுமென இக்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது,

மேலும், பவன்கல்யாண் ஒரு தலையாக மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.  இவரது காதலை மாணவி ஏற்காத நிலையில், இன்று,  மாணவியுடன் பேசும்போது, அவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியைக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெடிச்சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் பலி!