உத்தரப்பிரதேசச் சேர்ந்த முஷாபர்நகர் என்ற பகுதியில், இளம்பெண் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ஆன நிலையில், இரண்டும் தோல்வியடைந்ததை அடுத்து, தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் அப்பா மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 வயது சரஸ்வதி என்பவருக்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். அதை அடுத்து, மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மாப்பிள்ளையை பார்த்து, குடும்பத்தினர் சரஸ்வதிக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இரண்டாவது திருமணமும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தான், தன்னுடன் வேலை பார்த்த அமித் என்ற நண்பருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சரஸ்வதி வாழத் தொடங்கினார். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னால், சரஸ்வதி தன்னுடைய லிவிங் ரிலேஷன்ஷிப்பை திருமணமாக மாற்ற, தந்தை மற்றும் சகோதரனிடம் சம்மதம் கேட்க வந்தார். அப்போதுதான், இருவரும் சேர்ந்து சரஸ்வதியை கொலை செய்துவிட்டு, பிணத்தை காட்டிற்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர், போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பாதி எரிந்த நிலையில் சரஸ்வதியின் பிணத்தை கண்டுபிடித்தனர். அதன்பின் நடந்த விசாரணையில், தந்தை, மகன் இருவரும் சரஸ்வதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.