உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து, தலைமை சாமியார் உள்பட ஒரு சிலர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் என்ற பகுதியில், தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், முதியவர் ஒருவர் ஆசிரமத்தில் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களை அறிமுகம் செய்வதாக அழைத்துச் சென்றதாகவும், அவரது வார்த்தையை நம்பி அந்த வீராங்கனை சென்ற நிலையில், போதைப் பொருள் கலந்த லட்டுவை சாப்பிட கொடுத்து, அதன் பின் அவர் சுயநினைவு இழந்ததும், தலைமை சாமியார் உள்பட அவரை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை வீடியோ எடுத்து தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் புகாரில் கூறி உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் சமர்ப்பித்த காணொளி மூலம் ஆசிரமறைகளை ஆய்வு செய்ததாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருவதாகவும், இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva