Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Yes Bank வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி....!!!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (11:53 IST)
யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் தற்போது கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.  
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதோடு, யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ முன்வந்தது.
 
மேலும், ஒரு மாத காலத்திற்கு யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.  ஆனால், தற்போது கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ளது. ஆம், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை வழங்கப்பட்டுள்ளது. 
 
வங்கியின் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) போன்ற மின்னணு பண பரிமாற்ற சேவைகள் மீண்டும் இயங்கும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments