Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Yes Bank விவகாரம்: ராணா கபூர் குடும்பத்திற்கு சிபிஐ லுக் அவுட்

Yes Bank விவகாரம்: ராணா கபூர் குடும்பத்திற்கு சிபிஐ லுக் அவுட்
, திங்கள், 9 மார்ச் 2020 (18:34 IST)
ராணா கபூர், குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 
 
தனியார் வங்கியான யெஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்த வங்கியின் இயக்குனர் குழுவை முடக்கி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
 
எஸ் பேங்க் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல அதிகாரி ரானா கபூர், பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அவரை கைது செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். அதில், கடும் நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனங்களு அதிக அளவு கடன்களை வழங்கி அதன் மூலமாக ராணாகபூர் ஆதாயம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் ஆதாயமாகப் பெற்ற பணத்தை தன் மகள்கல் பெயரில் முதலீடு செய்ததுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
 
இதுகுறித்து மேலும் சில குற்றச்சாட்டை அமலாக்கத்துறையினர் கூற அதைக் கேட்டு, ராணாகபூர் கணகலங்கிவிட்டதாகவும், இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 
 
மேலும் ராணா கபூர், குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ராணா கபூர், மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராஹீ ராதா ஆகியோர் வெளிநாடு செல்வதை தடுக்க இந்த லுக் அவுட் நோட்டீஸ்  கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…