Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாரை ஏன் எதிர்த்தீங்க?: ஒரு மாசத்துல பதில் சொல்றோம்! – ஓபிஎஸ் அவகாசம்

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (11:38 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தது குறித்து பதிலளிக்க ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அன்று எடப்பாடியார் மீது அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் பெருவாரி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

அவர்மீது அதிருப்தி தெரிவித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்யவே உச்சநீதிமன்றம் சென்றது திமுக.

ஆனால் உச்சநீதிமன்றம் இதுகுறித்து சபாநாயகர்தான் கேள்வி கேட்க முடியும் என கூறியது. இந்நிலையில் 11 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தது ஏன்? என கேள்வியெழுப்பி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு விளக்கம் தர ஒரு மாத காலம் அவகாசம் தரும்படி ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments