Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியாரை ஏன் எதிர்த்தீங்க?: ஒரு மாசத்துல பதில் சொல்றோம்! – ஓபிஎஸ் அவகாசம்

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (11:38 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தது குறித்து பதிலளிக்க ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அன்று எடப்பாடியார் மீது அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் பெருவாரி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

அவர்மீது அதிருப்தி தெரிவித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்யவே உச்சநீதிமன்றம் சென்றது திமுக.

ஆனால் உச்சநீதிமன்றம் இதுகுறித்து சபாநாயகர்தான் கேள்வி கேட்க முடியும் என கூறியது. இந்நிலையில் 11 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தது ஏன்? என கேள்வியெழுப்பி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு விளக்கம் தர ஒரு மாத காலம் அவகாசம் தரும்படி ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி ஆதரவாளர்களை தட்டித்தூக்கும் ராமதாஸ்! அன்புமணி போடும் ஸ்கெட்ச்? - பாமகவில் பரபரப்பு!

இது ரொம்ப தப்பு.. கொலம்பியா சென்று அந்நாட்டு அரசுக்கே கண்டனம் தெரிவித்த சசிதரூர்...!

’கோபேக் இந்தியா’ விவேக் ராமசாமி பதிவுக்கு ஆவேசமான அமெரிக்க நெட்டிசன்கள்..!

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments