Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவனை மிரட்டி மிரட்டி பாலியல் சுகம் கொண்ட ஆண்ட்டி: பாய்ந்தது போக்சோ

சிறுவனை மிரட்டி மிரட்டி பாலியல் சுகம் கொண்ட ஆண்ட்டி: பாய்ந்தது போக்சோ
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:11 IST)
கேரளாவில் 9 வயது சிறுவனை மிரட்டி 36 வயதான பெண் ஒருவர் சுமார் ஒரு ஆண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு மருத்துவர்களிடம் அவன் மாமாவின் மனைவி தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். 
 
இதன் பின்னர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த சிறுவனை மிரட்டி அந்த பெண் ஒரு ஆண்டுக்கும் மேலாக இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. 
 
சிறுவனிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டு, பிறகு சிறுவன் குற்றம்சாட்டிய அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதை தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றவாளியின் கழுத்தில் பாம்பை அணிவித்து விசாரணை...