Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர்களுக்கு மனைவியை இரையாக்கிய கணவன் – குழந்தைகள் முன்பு தாய்க்கு நடந்த கொடூரம்!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (19:08 IST)
தன் மனைவியை குடிக்கவைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் கணவர் ஒருவர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 25 வயது பெண். அவருக்கு திருமணமாகி 5 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் மனைவியையும் இரண்டு மகன்களையும் நண்பர்கள் வீட்டுக்கு சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மனைவியை வலுக்கட்டாயமாக மது குடிக்கவைத்துள்ளார். அதன் பின் கணவரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அவரது உடலில் சிகரெட்டுகளால் சூடு வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இது அனைத்தும் அந்த பெண்ணின் இரு குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

தொடர் பாலியல் வல்லுறவால் அந்த பெண் மயக்கமடைய அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் மயக்கம் தெளிந்து அங்கிருந்து வெளியேறி இளைஞர் ஒருவரின் உதவியால் போலீஸார் மற்றும் ஊடகங்களுக்கு தனக்கு நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் உள்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்