ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவர் ரோஹினி, அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
பத்மா ராவ் நகரில் தனியாக வசித்து வந்த ரோஹினி, நவம்பர் 22 அன்று கதவை திறக்காததால், அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்றபோது, அவர் சடலமாக காணப்பட்டார்.
அவரது வீட்டில் கிடைத்த தற்கொலை குறிப்பில், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், விசா நிராகரிக்கப்பட்டதை குறித்தும் ரோஹினி எழுதியிருந்தார்.
ரோஹினி கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்த ஒரு புத்திசாலி மாணவி என்றும், அமெரிக்காவில் மருத்துவத் தொழில் தொடங்குவது அவரது நீண்ட நாள் கனவு என்றும் அவரது தாயார் லட்சுமி தெரிவித்தார். விசா மறுக்கப்பட்டதால் அவர் ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ரோஹினி அதிகப்படியான மாத்திரைகள் அல்லது ஊசி மூலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.