Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கியை கையில் வைத்து ரீல்ஸ் எடுத்த பெண்.. நெட்டிசன்கள் கண்டனம்..!

Mahendran
வெள்ளி, 11 ஜூலை 2025 (11:46 IST)
தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் நின்றுகொண்டு, துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு நடனமாடும் இளம் பெண்ணின் வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
எப்போதும் பிஸியாக இருக்கும் கான்பூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பெண் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு நடனமாடுவதை கண்டு, நெட்டிசன்கள் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 
 
அவர் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா என விசாரணை செய்ய வேண்டும் என்றும், வாகனங்களில் செல்பவர்களை பயமுறுத்தும் வகையில் இந்த ரீல்ஸ் வீடியோ இருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகளை டேக் செய்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் ஷாலினி பாண்டே என்றும், அவர் ஏற்கனவே சில சர்ச்சைக்குரிய வீடியோக்களைப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், லக்னோ காவல்துறை இந்த வீடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments