Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (11:39 IST)
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்துக்கு இலவச டிக்கெட் வழங்குவதாக ஏற்பட்ட புரளியே லட்சக்கணக்கானோர் அங்கு கூடுவதற்குக்  காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பையும் ஆர் சி பி அணி நிர்வாகமும், கர்நாடக மாநில அரசும்தான் ஏற்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இன்னும் ஒரு சாரார் புஷ்பா 2 ரிலீஸின் போது இதே போன்ற உயிர்சேதம் நடந்தபோது அதற்குக் காரணம் நடிகர் அல்லு அர்ஜுன்தான் என்று சொல்லி அவர் கைது செய்யப்பட்டார், அது போல இப்போது இந்த உயிர் சேதங்களுக்குக் காரணம் விராட் கோலிதான் என்று அவரைக் கைது செய்வீர்களா எனக் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments