Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (11:32 IST)
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என்றாலும், ராணுவம் குறித்து அவதூறாக பேசுவதெல்லாம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் வராது என்று ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
தன் மீதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை மனு செய்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தியை அவர் சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
அரசியலமைப்பு சட்டத்தின்படி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு என்றாலும், இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.
 
ராணுவம் குறித்து அவதூறாக பேசுவதெல்லாம் பேச்சு சுதந்திரம் இல்லை என்று கூறி நீதிபதி ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
ராகுல் காந்தியின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments