என்னடா பித்தலாட்டம் இது? பெட்ரோலில் தண்ணீரை கலந்து விற்ற பங்க்! - வைரலாகும் வீடியோ!

Prasanth K
புதன், 17 செப்டம்பர் 2025 (14:36 IST)

ஹைதராபாத்தில் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் பெட்ரோல் விலையை அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில், முழுவதும் தூய்மையான பெட்ரோலை விற்றால் விலை அதிகமாக இருக்கும் மக்களால் வாங்க முடியாது என்பதால் அதனுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆனால் ஹைதராபாத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீரையே கலந்து விற்றது அம்பலமாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் ஷெரிகுடாவில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மாருதி ப்ரெஸ்ஸா காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

 

பின்னர் சில கிலோ மீட்டர்கள் சென்றதுமே எஞ்சின் பழுதாகி வண்டி நின்றது. அதை மெக்கானிக்கிடம் கொண்டு சென்றபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதால் எஞ்சின் பழுதாகிவிட்டதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்த பங்கிற்கு ஆட்களுடன் சென்ற ரமேஷ் ஒரு வாட்டர் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து தண்ணீரும், பெட்ரோலும் தனித்தனியாக பிரிவதை வீடியோ எடுத்துக் காட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments