தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

Siva
திங்கள், 27 அக்டோபர் 2025 (15:35 IST)
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் 'சிறப்புத் தீவிர திருத்தப் பணி' நாடு முழுவதும் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 47 சிவில் சர்வீஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.
 
SIR செயல்முறை என்றால், தேர்தல் பிழையின்றி நடக்க, வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்த்துப் பட்டியலை புதுப்பிக்கும் பணி ஆகும். இது முதலில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்கவுள்ளது.
 
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த செயல்முறையை கடுமையாக எதிர்க்கிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்படுவதாக கூறி, முதல்வர் மமதா பானர்ஜி பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், "சரியான ஆவணங்கள் உள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; ஊடுருவல்காரர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள்" என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த அரசியல் சவால்களுக்கு மத்தியில், அதிகாரிகளின் இடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments