Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என்று நினைத்தோம் - காஷ்மீர் மக்கள் பரிதாபம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் என்று நினைத்தோம் - காஷ்மீர் மக்கள் பரிதாபம்
, செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:43 IST)
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... ’இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார். 
இது இந்தியா - பாகிஸ்தான் உறவை பெரிதும் பாதித்தது. இதில் முக்கியமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று பரவலான கருத்து எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA)அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் நாட்டில் உள்ள எல்லைப்பகுதிகளுக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் (காஷ்மீர் ஆக்கிரமிப்பு )மீது இன்று அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
webdunia
இதில் முக்கியமாக ஜெய்ஸ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானங்ஜ குண்டு வீசியது. இதில் இவ்வமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது. 
webdunia
இந்த தாக்குதல் விவகாரத்தில் லேசர் உதவியுடன் தான் சரியான இலக்குகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது . இது தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற 21  நிமிட தாக்குதலில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருந்த அத்துனை தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும்  தெரிகிறது.
 
இது தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த துல்லியமான தாக்குதல்  இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிச் சாதனையாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில் இந்திய எல்லையை ஒட்டிதான் பாகிஸ்தான் பகுதியில் நம் நாட்டு விமானப் படை தாக்குதல் நடத்தியதால் இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக 1000 கிலோ வெடிகுண்டுகளை வீசியது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் பதியடி தருவதாகக் கூறியுள்ளது. 
 
இந்நிலையில் இந்த தாக்குதல் பற்றி எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறியதாவது:
 
'அதிகாலையில் நாங்கள் அனைவரும் இல்லத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் போது விமாங்களின் சத்தம் கேட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தொடங்கிவிட்டதாக நினைத்தாக நினைத்தேன். என் குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டேன்.' இவ்வாறு தெரிவித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீல் மேட்டர் ஓவர்: திமுகவில் இணையும் தேமுதிக?