Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

Mahendran
வியாழன், 17 ஏப்ரல் 2025 (17:31 IST)
நாடு முழுக்க கவனம் செல்ல வைத்துள்ள மசோதா விவகாரத்தில், உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய உத்தரவுகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசு, 10 சட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம், "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமை சட்டவிரோதம், ஓரே மாதத்தில் முடிவு செய்ய வேண்டும்" என தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பில், குடியரசுத் தலைவர் வரை முறையாக முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.
 
இதனை கண்டிப்பதாக தெரிவித்த ஜகதீப் தன்கர், “நீதிமன்றம் ஜனநாயகத்தின் மீது ஆணையிட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒரு முடிவெடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்க முடியாது. இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் செயல்” என்றார்.
 
அவர் கூறிய இந்தக் கருத்து அரசியல் வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments