Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட்டில் நீடிக்கும் மீட்பு பணி - 150-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:12 IST)
உத்தரகாண்ட்டில் 11 வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணிகளில் 56 உடல்கள் மீட்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

 
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் உருவான வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. அங்கிருந்த நீன்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. சுரங்க பாதையில் பணியில் இருந்த ஊழியர்கள், மக்கள் என சுமார் 35 பேர் அதற்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
இந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுரங்கத்தில் உள்ளவர்களை மீட்க ஒரு வாரத்திற்கு மேலாக இந்தோ- திபெத் எல்லை படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் போராடி வருகிறார்கள். 
 
இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 150-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. காணாமல் போன 150-க்கும் மேற்பட்டோரை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments