Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்களில் தீர்வு: ஸ்டாலினிடம் திமுக பிரமுகர் மீதே புகார் அளித்த பெண்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (07:07 IST)
ஸ்டாலினிடம் திமுக பிரமுகர் மீதே புகார் அளித்த பெண்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நூறு நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் பொதுமக்கள் திமுகவை நம்பி மனு அளிக்கலாம் என்றும் கூறிவருகிறார் 
 
இந்த நிலையில் வேளாங்கண்ணி சேர்ந்த பெண் ஒருவர் திமுக பிரமுகர் ஒருவர் மீது புகார் அளித்து தனக்கு நீதி வேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று வேளாங்கண்ணிக்கு பிரசாரத்துக்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் இடம் அந்த பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் கொடுத்த மனுவில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டார் என்றும் பொய்யான ஆவணங்கள் மூலம் அவர் அபகரித்த அந்த நிலத்தை தனக்கு மீண்டும் திருப்பி தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் 
 
ஆனால் அவரது மனு ஸ்டாலின் முன்னிலையில் வாசிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வசந்த் கூறியபோது ’அரசியல் செல்வாக்கு காரணமாக எங்களுடைய நிலத்தை அபகரித்து விட்ட திமுக பிரமுகர் தாமஸ் ஆல்வா என்பவர் மீது புகார் அளித்தோம். ஆனால் எங்கள் குறைகளை கேட்பதற்கு மைக்கில் அழைக்கவில்லை அதனால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம்’ என்று கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments