Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண் வன்கொடுமை செய்து தூக்கில் ஏற்றம்! – உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!

இளம்பெண் வன்கொடுமை செய்து தூக்கில் ஏற்றம்! – உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!
, வியாழன், 6 அக்டோபர் 2022 (11:45 IST)
உத்தர பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள நாக்லா ஷிமாம் என்ற கிராமத்தில் நபர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த நபர் வேலை நிமித்தமாக மெயின்புரி சென்ற நிலையில், தாயார் ஆக்ரா சென்றுள்ளார்.

இளைய மகள் ட்யூசன் சென்று விட்ட நிலையில் 19 வயது மூத்த மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்குள் நுழைந்த புஷ்பேந்திரா என்ற இளைஞன், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் கழுத்தை நெறித்து தூக்கில் தொங்கவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளான்.


இந்த சம்பவத்தை ட்யூசன் சென்று விட்டு வந்த இளம்பெண்ணின் தங்கை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

தப்பியோடி தலைமறைவான புஷ்பேந்திரா என்ற நபரை போலீஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு சித்ரவதை: டாக்டர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்!