Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
, புதன், 14 ஏப்ரல் 2021 (13:32 IST)
அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.  
 
இந்நிலையில் கொரோனாவால் புதிதாக 1,84,372 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்தது. புதிதாக 1027 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்தது. 
 
இதனிடையே, உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை !!