Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் ராஜினாமா படலம்: ஆட்சியை தக்க வைக்க திண்டாட்டம்?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:43 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளதால், அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். 
 
விஜயாநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்துள்ளனர். 2 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 77 ஆக குறைந்துள்ளது. 
 
இது ஆட்சிக்கு கடும் நெருக்கடி தரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சித்தராமையா இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments