Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடும் காரில் மாணவி பலாத்காரம் ... இரண்டு கொடூர இளைஞர்கள் கைது !

ஒடும் காரில் மாணவி  பலாத்காரம் ... இரண்டு கொடூர இளைஞர்கள் கைது !
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (13:52 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாரைமீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில்,  ஒரு பள்ளி மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த  இரு இளைஞர்களை போலீஸார் கைது  செய்துள்ளனர். 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாரைமீர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திருப்பிக் கொண்டிருந்த 11 ஆம் வகுப்பு  மாணவி ஒருவரை , இரு இளைஞர்கள் கடத்தி, ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
 
பின்னர், ஒரு குளத்தின் அருகில் மாணவியை இறக்கிவிட்டு தப்பி ஓடினர். அதன் பின், தன் வீட்டுக்குச் சென்ற மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
அதனையடுத்து, காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரிசி மற்றும் சிகந்தர் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளதாக அந்த மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இது அவர் கூறியதாவது :
 
அந்த இளைஞர்கள் பயன்படுத்திய காரில் கருப்பு ஸ்டிக்கரை ஜன்னலில் ஒட்டியிருந்ததாகவும்  அவர் தெரிவித்துள்ளார். ஒடும் காரில் வைத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ரயில்வே என்னுடைய சொத்து”.. நீதிபதி கூறிய காமெடி கதை