Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனரை கிழித்து ரகளை: கண்டும் காணாமல் போன தினகரன்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:16 IST)
அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் இன்று முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் மரியாதை செலுத்த சென்ற போது பேனர்கள், கொடிகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அக்டோபர் 30 ஆம் தேதி இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா. இந்நிகழ்ச்சி தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
 
விழாவையொட்டி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர். துணை முதலவர், மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்னன்ஆகியோர் மரியாதை செலுத்தினர். 
 
இதே போல் தினகரனும் மரியதை செலுத்த வந்திருந்தார். அவருடன் அமமுக தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர். அப்போது தேவர் நினைவிடம் அருகே அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.
 
தினகரன் முன்னிலையிலேயே அதிமுக பேனர்கள் மற்றும் கொடிகளை அமமுகவினர் சேதப்படுத்தினர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். ஆனால், இது குறித்து தினகரன் எதுவும் தெரிவிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments