Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக், வாட்ஸப் தடை? மத்திய அரசிடம் வணிகர் சங்கம் கோரிக்கை!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (08:34 IST)
வாட்ஸப் செயலி அறிவித்துள்ள புதிய நிபந்தனைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை தடை செய்ய கோரி வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் வாட்ஸப் செயலி தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை கண்காணிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸப்பை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில் அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ள வாட்ஸப்பின் புதிய கொள்கைகளை தடை செய்ய வேண்டும் அல்லது வாட்ஸப்பையும், அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments