Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்லரின் நாஜிப்படைக்கு சமமானவர் ட்ரம்ப் ஆதரவாளர்கள்! – அர்னால்ட் ஆவேசம்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (08:22 IST)
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பிரபல நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நடப்பு அதிபர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் ட்ரம்ப் தொடர்ந்து வாதம் செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள கலிபொர்னியாவின் முன்னாள் கவர்னரும், பிரபல நடிகருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகர் “மக்கள் தேர்தல் மூலம் தங்கள் முடிவை தெரிவித்துவிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் சதிக்காரர்களுடன் கூட்டு சேர்கிறார். ட்ரம்பின் ஆதரவாளர்கள் செயல்பாடு ஹிட்லரின் நாஜி படையை ஒத்ததாக இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபராக ட்ரம்ப் உள்ளார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments