Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 நாள் காவல் முடிகிறது: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?

5 நாள் காவல் முடிகிறது: ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (07:28 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளனர். மேலும் ப.சிதம்பரம் காவலை நீடிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. 
 
 
இன்றைய விசாரணையின்போது ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் விடுதலையாகிவிடுவார். மாறாக காவல் நீடிக்கப்பட்டால் மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை வரும். இந்த நிலையில் அமலாகத்துறை அவரை கைது செய்ய செப்டம்பர் 2ஆம் தேதி வரை மட்டுமே தடை விதித்துள்ளது. அதன்பின்னர் அமலாக்கத்துறை கைது செய்தால் ப.சிதம்பரம் தரப்பிற்கு மேலும் சிக்கல் உண்டாகும் என தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பெரும் பதட்டம்