Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகரிக்கும் ஒருநாள் உயிரிழப்புகள்; குறையும் பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

அதிகரிக்கும் ஒருநாள் உயிரிழப்புகள்; குறையும் பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (09:25 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,24,78,060 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,241 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,06,520 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,11,80,751 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 7,90,789 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணெதிரே களவு போன சைக்கிள்; துரத்தி சென்ற சிறுவன்! – தனிப்படை செய்த உதவி!