Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை..!

tirupathi
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (10:27 IST)
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். 
 
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட 300 ரூபாய் டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
 டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி நாள் வருவதை அடுத்து  டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் சொர்க்கவாசல் திறக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட் இன்று முதல் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
ஆன்லைன் மூலம் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை  https://ttdevasthanams.ap.gov.in என்ற  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை.. அறிக்கை சமர்ப்பிப்பு..!